அஜீத்துக்கு ஷாம்லி செய்த 'சிபாரிசு'!

பேபியாக இருந்த காலத்திலேயே பிஸியான நடிகையாக திகழ்ந்த ஷாம்லி, 'குமாரி'யான பிறகு நடித்த முதல் தெலுங்குப் படம் 'ஓய்' சக்கைப் போடு போடுகிறது ஆந்திராவில். அந்த சந்தோஷத்தில் ஷாம்லி அளித்த பேட்டி:
ஆரம்பத்தில் இந்தப் படம் குறித்த பல தகவல்கள் யாருக்கும் சொல்லப்படவில்லை. காரணம் என்னை குழந்தை நட்சத்திரமாகத்தான் பலரும் பார்த்திருப்பார்கள். வளர்ந்த பிறகு என் தோற்றம் நிறைய பேருக்கு தெரியாது. படம் ரிலீஸ் வரை அந்த சஸ்பென்ஸ் இருக்கும் என படக்குழுவினர் விரும்பினார்கள். அதனால்தான் பட விஷயங்கள், ஸ்டில்கள் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டது.
ஓய் கதை பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இப்போது தொடர்ந்து நடிக்கும் ஐடியா இல்லை. அடுத்து சிங்கப்பூர் யுனிவர்சிட்டியில் திரைப்படம் சம்பந்தமாக படிக்கப் போகிறேன். இது 9 மாத கோர்ஸ்தான். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். படித்துக்கொண்டே நடிப்பேன்.
எல்லோரும் என்னை கவர்ச்சியாக நடிப்பீர்களா என்றே கேட்கிறார்கள். ஜீன்ஸ், டீசர்ட், குர்தா போன்ற மாடர்ன் உடைகளை வேண்டுமானால் அணிவேன். ஆனால் நிச்சயம் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன். நிறைய படங்கள் கவர்ச்சி இல்லாமலேயே நல்ல கதைகளுக்காக ஓடுகின்றன.
ஷாருக்கான் என்றால் எனக்கு உயிர். அஜீத் என் அக்கா ஷாலினியைத் திருமணம் செய்யும் முன் என்னிடம் சிபாரிசு, உதவியெல்லாம் கேட்பார். சிபாரிசு செய்தால் என்ன தருவீர்கள் என்று கேட்பேன். ஷாருக்கானிடம் கூட்டிப்போவேன் என்பார். சொன்னபடியே திருமணம் ஆனதும் அழைத்து போனார். ஷாருக் என்னை கட்டிப்படித்து நீ குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களை பார்த்தேன். நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டினார் என்றார் ஷாம்லி.


Click it and Unblock the Notifications











