Don't Miss!
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பசங்க படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வீண் போகவில்லை-பாண்டிராஜ்
பசங்க படத்திற்கு சிறந்த தமிழ்ப் படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பாண்டிராஜ் கூறுகையில்,
தேசிய விருது கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சிக்கு வசனம் எழுத அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது, சந்தோஷமாக இருக்கிறது என்றார் பாண்டிராஜ்.
இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சசிக்குமார் கூறுகையில்,
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அது பலித்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ், நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இத்தனை பேரும் சேர்ந்துதான் இந்த மூன்று விருதுகளுக்கு்க காரணமாக இருந்தார்கள் என்றார்.