Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா
திடீர் திருமணம், கணவர் மாயம், தந்தையுடன் பிரச்சினை, ஆவி அமுதாவுடன் மோதல், மான நஷ்ட வழக்கு, கோர்ட், போலீஸ் என்று பரபரப்பைக் கிளப்பி வருகிறார் கனகா.
நேற்று திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கனகா. அப்போது அவர் கூறியதாவது:
"எனது தாய் 2002ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். அன்றைக்குக் கூட எனது தந்தை தேவதாஸ் வரவில்லை. என்னை பற்றி அவதூறாக பேட்டி தருகிறார். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார். கஷ்டப்பட்டுதான் அம்மா என்னை வளர்த்தார். அவர் இறப்பதற்கு முன் சொத்துக்களை எனக்கு உயில் எழுதி வைத்தார்.
இது தொடர்பாக எழுந்த வழக்கில், சொத்துகள் எனக்குத்தான் சேரும் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இன்னும் கூட என் தந்தை என்னை பற்றியும், மறைந்த எனது அம்மா பற்றியும் தவறாக பேட்டி தருகிறார். எனது தாய் எழுதிய உயில் வழியாக வரும் சொத்து வருமானத்தில் 3 சதவீதம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு செலவிடுவேன். விலங்குகள் நலனுக்காகவும் இதை பயன்படுத்துவேன்.
விரைவில் எனது அம்மா தேவிகா பெயரில் அறக்கட்டனை தொடங்க உள்ளேன். அதன் மூலம் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேன். நான் இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்," என்று கூறினார்.
கனகாவின் திருமணம், காணாமல் போன கணவர் போன்றவை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.