Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா
திடீர் திருமணம், கணவர் மாயம், தந்தையுடன் பிரச்சினை, ஆவி அமுதாவுடன் மோதல், மான நஷ்ட வழக்கு, கோர்ட், போலீஸ் என்று பரபரப்பைக் கிளப்பி வருகிறார் கனகா.
நேற்று திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கனகா. அப்போது அவர் கூறியதாவது:
"எனது தாய் 2002ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். அன்றைக்குக் கூட எனது தந்தை தேவதாஸ் வரவில்லை. என்னை பற்றி அவதூறாக பேட்டி தருகிறார். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார். கஷ்டப்பட்டுதான் அம்மா என்னை வளர்த்தார். அவர் இறப்பதற்கு முன் சொத்துக்களை எனக்கு உயில் எழுதி வைத்தார்.
இது தொடர்பாக எழுந்த வழக்கில், சொத்துகள் எனக்குத்தான் சேரும் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இன்னும் கூட என் தந்தை என்னை பற்றியும், மறைந்த எனது அம்மா பற்றியும் தவறாக பேட்டி தருகிறார். எனது தாய் எழுதிய உயில் வழியாக வரும் சொத்து வருமானத்தில் 3 சதவீதம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு செலவிடுவேன். விலங்குகள் நலனுக்காகவும் இதை பயன்படுத்துவேன்.
விரைவில் எனது அம்மா தேவிகா பெயரில் அறக்கட்டனை தொடங்க உள்ளேன். அதன் மூலம் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேன். நான் இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்," என்று கூறினார்.
கனகாவின் திருமணம், காணாமல் போன கணவர் போன்றவை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.