Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராணா கைவிடப்பட்டதா? - கே எஸ் ரவிக்குமார் விளக்கம்
சென்னை: ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா கைவிடப்பட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை, என படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
ராணா பட பூஜை கடந்த ஏப்ரல் 29-ம்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போதுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராணா படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
படம் கைவிடப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் ஈராஸ் நிறுவனம் உருவாக்கவிருந்த படம் இது. எனவே ராணா படம் கைவிடப்பட்டதா? என்று அப்படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்டபோது, அதை உடனடியாக மறுத்தார்.
அவர் கூறுகையில், "ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். இதுவரை தீபிகா மற்றும் வேறு நடிகர்கள் தொடர்புடைய காட்சிகளை எடுத்து வந்தோம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்," என்றார்.
ரஜினி குடும்பத்தினர் இந்தப் படம் குறித்துக் கூறுகையில், "இப்போதைக்கு ரஜினி உடல்நிலைதான் முக்கியம். அது சரியானபிறகு ராணா தொடங்கும்", என்றனர்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?