Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இரண்டாவது திருமணம் இப்போது இல்லை! - சோனியா அகர்வால்
இப்போதைக்கு இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ விரும்புகிறேன், என்றார் நடிகை சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவனால் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். அறிமுகப்படுத்திய குரு - நடிகை என்ற உறவு பின்னர் காதலன் - காதலியாக மாறி, திருமணத்தில் முடிந்தது.
ஆனால் இந்தத் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்ததால், விவாகரத்துப் பெற்றனர்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளது. சமீபத்தில்தான் செல்வராகவன் - கீதாஞ்சலி நிச்சயதார்த்தம் நடந்தது.
அடுத்து சோனியா அகர்வாலும் திருமணம் செய்து கொள்வார் என்று பேச்சு கிளம்பியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் என்பதையே நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மேலும் எனக்கு ரொம்ப வயதாகியும் விடவில்லை. எனவே இன்னும் கொஞ்ச நாள் வாழ்க்கையை அனுபிவித்துவிட்டு, திருமணம் குறித்து யோசிக்கப் போகிறேன். இப்போதைக்கு என் நோக்கம், மீண்டும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அவ்வளவுதான்!," என்றார்.