நல்ல கதை இருந்தா வாங்க...-ஸ்வாதி போட்ட போடு!!

By Staff

Swathi
சுப்பிரமணியபுரம் என்ற ஒரு படம்தான் நடித்தார் ஆனால் அதற்குள் சுவாதி தமிழ் திரையுலகப் புள்ளிகள் தேடும் நாயகியாகிவிட்டார்.

ஆனாலும் அடுத்த படத்தில் உடனடியாக நடித்ததாகத் தெரியவில்லை.

ஏன்...?

சுவாதியின் பிடிவாதம்தானாம். நல்ல கதை, பிடித்தமான வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். இல்லாவிட்டால் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் எனக்கு அந்தப் படமே வேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறி வருகிறாராம்.

சமீபத்தில் அப்படி வந்த 4 தமிழ் படங்களின் வாய்ப்புகளை உதறிய ஸ்வாதி, இப்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டும் நடித்து வருகிறாராம்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதுதானே காலம்காலமாய் ஹீரோயின்களின் பாணி. இவருக்கு மட்டும் ஏன் இத்தனைப் பிடிவாதம்...?

ஸ்வாதியிடமே கேட்டோம்.

"பணம் சம்பாதிப்பது என் நோக்கமல்ல. மனசுக்குப் பிடித்தமான வேலையை கண்ணியமாக செய்ய வேண்டும். இதுதான் என் ஸ்டைல். என் அப்பா, இந்தியன் நேவிக்காக ரஷ்யாவில் வேலை பார்த்தவர். அங்கு விளாடிவோஸ்டோக் என்ற இடத்தில் பிறந்தேன். உலகின் கிழக்குக் கோடியில் உள்ள பனி நகரம் இது. மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வளர்ந்த பெண் நான்.

என் இயல்புக்கேற்ற கதை, என் உடலமைப்புக்கேற்ற வேடம், கண்ணியமான குழுவுடன்தான் என்னால் நடிக்க முடியும். சுப்பிரமணியம் குழு அப்படிப்பட்ட ஒன்றுதான். அதுபோன்ற டீம் மீண்டும் அமைந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் இப்படியே பை சொல்லவிட்டுப் போகவும் தயங்கமாட்டேன்", என்றார்.

அம்மாடியோவ்...!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X