Don't Miss!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
முதல்வர் இருக்கும் போதே பாதியில் கிளம்புவதா? - நடிகர் நடிகைகளுக்கு குஷ்பு கண்டனம்
முதல்வர் மேடையில் இருக்கும் போதே, அவரை அவமதிக்கும் வகையில் சில நடிகர் நடிகைகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது கண்டிக்கத்தக்கது, என்றார் நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்பு.
நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி வருது வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. முதல்வரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடியும் முன்பே பாதியில் வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடையிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார்.
இப்போது அது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்களும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலியாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது தெரிய வந்தது. நான் அதிர்ச்சியானேன்.
பெரியவர்கள் உட்கார்ந்து இருக்கும் விழாவில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மரியாதைக்குரிய செயல் அல்ல. எல்லா நடிகர், நடிகைகளும் குடும்பங்களுடன் வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்து வெளியேறியது அவமரியாதையான செயல். நான் தி.மு.க. சார்பில் விழாவில் பங்கேற்கவில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தேன்.
வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் கிளம்பிவிட்டதாக நடிகர், நடிகைகள் சொல்லலாம். பெருமளவு பணிச்சுமைக்கு நடிவிலும் சினிமா வளர்ச்சிக்காக உழைக்கும் 87 வயதுடைய முதல்வர் 2 மணி நேரம் விழா மேடையில் உட்கார்ந்து இருக்கிறார். நடிகர், நடிகைகளால் ஏன் உட்கார முடியாது...", என்றார்.