Don't Miss!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் கர்ப்பமாக இல்லை-ஷில்பா ஷெட்டி மறுப்பு
தான் காதலித்து வந்த லண்டன் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை மணந்து அவருடன் லண்டனில் வாழ்க்கை நடத்தி வருகிறார் ஷில்பா. இந்த நிலையி்ல் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து பலரும் ஷில்பாவைத் தொடர்பு கொண்டு தாயாகப் போவதற்காக வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால் தான் கர்ப்பமாக இல்லை என்று குண்டைப் போட்டுள்ளார் ஷில்பா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை கால்கள், எத்தனை மெசேஜ்கள். அத்தனைக்கும் பதிலளித்து எனக்கு சலித்துப் போய் விட்டது. நான் கர்ப்பமாக இல்லை. இதுதான் இப்போதைக்கு என்னிடமிருந்து வரும் விசேஷ செய்தி. அதுதொடர்பாக வெளியான அத்தனை செய்தியும் பொய். எனக்கு இதைப் படித்து தலை சுற்றிக் கொண்டு வருகிறது என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார் ஷில்பா.
கடந்த வாரம்தான் ஷில்பா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது ஷில்பாமறுத்து விட்டார். தனது ட்விட்டர் செய்தியில் மேலும் அவர் கூறுகையில், மீடியாவில் வந்ததைப் போல இப்போதைக்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் நானே சொல்வேன் என்றும் ஷில்பா கூறியுள்ளார்.
நான் பிரபலமானவளாக இரு்ந்தாலும் கூட எனக்கும் பிரைவஸி உண்டு என்பதை மீடியாக்கள் உணர வேண்டும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஷில்பா கோரியுள்ளார்.
தற்போது தன்னுடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே பதட்டத்துடன் இருக்கிறாராம் ஷில்பா.
முதல்லை கோப்பையை வெல்லட்டும், அப்புறம் பாப்பா பத்திக்கவலைப்படலாம் என நினைத்து விட்டாரோ ஷில்பா.