Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திருமணத்துக்கு பின் நான் மும்பைவாசி: நவ்யா
திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன் என்கிறார் நடிகை நவ்யா நாயர்.
பிரபல தமிழ்- மலையாள நடிகை நவ்யா நாயர். அழகிய தீயே மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
இவருக்கும் கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனனுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் மேனன், மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில், துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணம் வருகிற ஜனவரி 21ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் கேரள முறைப்படி நடக்கிறது. சங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் மும்பையில் செட்டில் ஆகிவிட நவ்யா முடிவு செய்துள்ளார். இதுபற்றி நவ்யா நாயர் கூறுகையில்,
'திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன். ஓய்வு நேரத்தை படிப்பில் செலவிடுவேன்.
திருமணத்திற்கு பின் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தால் அதை பயன்படுத்திக் கொள்வேன். திருமணத்திற்கு பின்பும் நடிப்பை கைவிட மாட்டேன் என்றார்.