Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
திருமணத்துக்கு பின் நான் மும்பைவாசி: நவ்யா
திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன் என்கிறார் நடிகை நவ்யா நாயர்.
பிரபல தமிழ்- மலையாள நடிகை நவ்யா நாயர். அழகிய தீயே மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
இவருக்கும் கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனனுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் மேனன், மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில், துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணம் வருகிற ஜனவரி 21ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் கேரள முறைப்படி நடக்கிறது. சங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் மும்பையில் செட்டில் ஆகிவிட நவ்யா முடிவு செய்துள்ளார். இதுபற்றி நவ்யா நாயர் கூறுகையில்,
'திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன். ஓய்வு நேரத்தை படிப்பில் செலவிடுவேன்.
திருமணத்திற்கு பின் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தால் அதை பயன்படுத்திக் கொள்வேன். திருமணத்திற்கு பின்பும் நடிப்பை கைவிட மாட்டேன் என்றார்.