Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார்-சிங்கமுத்து
வடிவேலுவின் மேனேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்துவை போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு நாள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது வடிவேலு குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் சிங்கமுத்து.
அவர் கூறுகையில், "வடிவேலுவின் மேனேஜர் மானேஜர் கருப்பா, சிவப்பா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எந்த தப்பும் செய்யாத என்னை சதி செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். வடிவேலு பற்றி நான் சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன். அப்போது வடிவேலுவும் என்னைப்போல் கம்பி எண்ணுவார்.
சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயற்சிக்கிறார். பிறரை அழிக்க பொய்யாக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் அவர். என் வீட்டு முன்னால் கூட வடிவேலு ஆட்கள் தினமும் தகராறு செய்கிறார்கள். அதை போலீசில் நான் சொல்லவில்லை. நடிகர் சங்கத்தில்தான் அவர் மேல் புகார் கொடுத்தேன். ஆனால் சங்கம் எதுவும் செய்யவில்லை.
வடிவேலு வறுமையால் வாடியபோது அவருக்குக் கை கொடுத்து உதவினேன். அவருக்கு காமெடி எழுதி கொடுத்தவர்கள் பலர் இப்போது அவருடன் இல்லை. அவருடைய இரண்டு மானேஜர்கள் இப்போது உயிருடன் இல்லை. வளர்ந்து விட்டதால் ஆணவமாக திரிகிறார். என்னை கைது செய்ய வைத்ததன் மூலம் வடிவேலுவைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஜெயிலுக்குள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். கொலைகாரர்களையும் சந்தித்தேன். கைதிகள் மத்தியில் தேவாரம், திருவாசகம், சொற்பொழிவு நடத்தினேன். கைதிகள் என்னிடம் பாசமாக பழகினார்கள் என்றார் சிங்கமுத்து.