ராஜபக்சேவை சந்திக்கவேயில்லை: கங்கை அமரன்

அன்மையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்ததாகவும், அவரது மகனை இலங்கையில் உள்ள தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதாக படம் எடுக்குமாறு அதிபர் சொன்னதாகவும், அந்த செலவை தாமே ஏற்றுக் கொள்வதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.
அந்த இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை கங்கை அமரன் தான். அவரது மகன் வெங்கட் பிரபுவை வைத்து தான் படம் தயாரிக்கச் சொன்னதாக செய்திகள் வந்தன. இதை கங்கை அமரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் இலங்கை சென்றேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அங்கு நான் அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. நான் அங்கு நடந்த சித்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளத் தான் சென்றேன். அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சித்தர்கள் கலந்து கொண்டனர்.
நான் சொந்த விஷயமாகவே சென்றேன். அப்படி இருக்கையில் நான் எப்படி ராஜபக்சேவை சந்திக்க முடியும். அப்படியே நான் சந்தித்திருந்தால் இந்நேரம் பத்திரிக்கைகளில் புகைப்படம் வந்திருக்காதா? இது அடிப்படையே இல்லாத வதந்தி. ராஜபக்சேவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











