Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷெரீன் இப்போது எழுத்தாளராக்கும்!
தமிழில் பிஸியாக இருந்த ஷெரீன், தனிப்பட்ட பிரச்சினைகளால் காணாமல் போனார். பின்னர் உற்சாகம் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பினார்.
இப்போது பூவா தலையா, பிருந்தாவனம், வில், யோகி என கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளார்.
கூடவே, கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறார். கன்னடப் படம் ஒன்றுக்கு கதையும் எழுதுகிறாராம்.
அவர் கூறுகையில்,
தமிழில் இப்போது நான் நடித்துள்ள 'பூவா தலையா' ரிலீசாக இருக்கிறது. அடுத்தடுத்து படங்கள் வரவிருக்கின்றன.
கன்னடத்தில் நான் நடிக்கும் 'சிகிகாலி', 'யோகி', தெலுங்கில் 'ஒக்க உதயம் ஒக்க சாயங்காலம்' ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்தியில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது. ஆனால், உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக எடை குறைந்தால், மற்ற மொழிகளில் நடிக்க இடைஞ்சலாக இருக்கிறது. அதனால்தான், இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன், எனும் ஷெரீன் படிப்பிலும் கவனம் செலுத்துகிறாராம்.
பி.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துள்ள ஷெரீன், ஓபன் யுனிவர்ஸிட்டியில் எம்.பில் தத்துவம் படிக்கப் போகிறாராம்.
கூடுதலாக இப்போது கன்னடப் படத்துக்கு கதை எழுதுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். படத்தின் பெயர், ஹீரோ, டைரக்டர் போன்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன். அடுத்த இலக்கு டைரக்ஷன்தான் என்கிறார் ஷெரீன்.
ரொம்ப முன்னேற்றம்தான்!