தாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக்
நான் தாய்மயடைந்த செய்தியைத் தொடர்ந்து என்னை வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் என்று ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக தாய்மயடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் தனது பிளாக் மூலம் தெரிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் வாழ்த்துகள் குவிந்து விட்டன. இதனால் இருவரும் நெகிழ்ச்சியடைந்து திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.
இதையடுத்து இருவரும் தங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தியில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களை வாழ்த்திய அனைவரின் அன்பு, ஆதரவு, வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றிகள் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











