Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்!
வடிவேலு பாணியில் சொன்னால், 'கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு' ஜெய்- அஞ்சலி அக்கப்போர்.
ஏழாம் அறிவு இசை வெளியீட்டுவிழாவில், தனக்கும் ஜெய்க்கும் இடையில் 'ஏதோ இருப்பதாக' வாக்குமூலம் கொடுத்து பப்ளிசிட்டி பண்ணியவர்தான் அஞ்சலி. இதை வைத்து இருவருக்கும் காதல் என்று செய்திகள் வரத் தொடங்கின.
இப்போது தனக்கும் 'அந்த நடிகரு'க்கும் (ஜெய்க்கும்) காதல் இல்லை, 'அந்த நடிகரு'டன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டார். என்னமோ ஜெய் என்ற நடிகரையே தெரியாது என்ற அளவுக்கு இருந்தது அஞ்சலியின் அறிக்கை.
சும்மா இருப்பாரா 'அந்த நடிகர்'... இப்போது அவரும் பதிலுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.
"நடிகை அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அதே நேரம் நான் நிச்சயமாக ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்று ஜெய் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நானும், அஞ்சலியும் எங்கேயும் எப்போதும்' படத்தில்தான் முதல்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன்பிறகு, '7-ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவரை சந்தித்தேன்.
இடையில், நாங்கள் வேறு எங்கும் சந்தித்துக்கொள்ளவில்லை. வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் காதல் இல்லை.
நிச்சயம் நடிகையை மணக்கமாட்டேன்
நான், நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் குறிப்பாக, ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன்.
என் கவனம் எல்லாம் என் தொழிலில்தான் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். என் கவனம், அந்த படத்தின் மீதுதான்!,'' என்று ஜெய் கூறியுள்ளார்.
நம்பிட்டோம் ராசா!