Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' - சங்கவி ஓபன் ஸ்டேட்மெண்ட்
தனது தோழி மீனா கல்யாணம் பண்ணிக் கொண்டதைப் பார்த்ததும், சங்கவிக்கும் திருமண ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது.
திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் விருப்பம் உள்ளது என்றும், ஆனால் நல்ல பரந்த மனப்பான்மை கொண்ட ஒருவர் மணமகனாக வந்தால் அடுத்த நிமிடமே கழுத்தை நீட்டிவிட வேண்டியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமராவதியில் அஜீத்துக்கு ஜோடியாகி பின்னர் பல படங்களில் விஜய்க்கு ஆஸ்தான நாயகி ரேஞ்சுக்கு நடித்து அப்படியே தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு போய் 100 படங்களைத் தாண்டியவர் சங்கவி. நடிகை மீனாவுக்கு நெருக்கமான தோழி.
இப்போது தானும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இதுகுறித்து சங்கவி கூறியுள்ளதாவது:
திரையுலகில் எல்லாருடனும் கலகலப்பாக பழகுபவள் நான். மிகவும் உதவியாக இருப்பேன். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என் தோழிகள்தான்.
என் தோழிகளில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள எனக்கும் விருப்பம்தான்.
ஆனால் எனக்கு வரப்போகிற மணமகன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.
ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் என்னைச் சார்ந்து இருப்பவராக, இருக்கக்கூடாது.
தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் கூடப் போதும், என்றார்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!