Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' - சங்கவி ஓபன் ஸ்டேட்மெண்ட்
தனது தோழி மீனா கல்யாணம் பண்ணிக் கொண்டதைப் பார்த்ததும், சங்கவிக்கும் திருமண ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது.
திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் விருப்பம் உள்ளது என்றும், ஆனால் நல்ல பரந்த மனப்பான்மை கொண்ட ஒருவர் மணமகனாக வந்தால் அடுத்த நிமிடமே கழுத்தை நீட்டிவிட வேண்டியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமராவதியில் அஜீத்துக்கு ஜோடியாகி பின்னர் பல படங்களில் விஜய்க்கு ஆஸ்தான நாயகி ரேஞ்சுக்கு நடித்து அப்படியே தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு போய் 100 படங்களைத் தாண்டியவர் சங்கவி. நடிகை மீனாவுக்கு நெருக்கமான தோழி.
இப்போது தானும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இதுகுறித்து சங்கவி கூறியுள்ளதாவது:
திரையுலகில் எல்லாருடனும் கலகலப்பாக பழகுபவள் நான். மிகவும் உதவியாக இருப்பேன். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என் தோழிகள்தான்.
என் தோழிகளில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள எனக்கும் விருப்பம்தான்.
ஆனால் எனக்கு வரப்போகிற மணமகன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.
ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் என்னைச் சார்ந்து இருப்பவராக, இருக்கக்கூடாது.
தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் கூடப் போதும், என்றார்.