Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
சலினா வாலி கான் (23). ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாடல் சாதிக் கான் என்பவரை இந்த ஆண்டு தான் மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான் அர்ஜுனுக்கு சாதிக் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது சலினாவுக்கு தெரிய வந்ததாம்.
இதையடுத்து கணவனும், மனைவியும் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சலினா.
இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் ஊழலால் பாதிக்கப்பட்டவள் தான். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. ரேஷன் கார்டு வாங்க நான் ரூ. 500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல். எனவே, ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நான் பொது இடத்தில் நிர்வாணமாக நடனம் ஆடுவேன்.
சிலரைப் போன்று பெயருக்காகவோ, பிரபலமாகவோ நான் இவ்வாறு கூறவில்லை. அன்னா நேர்மையானவர். அவர் என்ன அவருக்காகவா உண்ணாவிரதம் இருக்கிறார். இல்லையே, அதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சாதி, மத, வேறுபாடுகளைத் தாண்டி பெரும்பாலானோர் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றார்.