பெங்களூரில் ராணா ரகசிய ஷூட்டிங்கா... சௌந்தர்யா மறுப்பு!
'ரஜினியின் ராணா படப்பிடிப்பு பெங்களூரில் ரகசியமாகத் தொடங்கிவிட்டது' என்று கடந்த வாரம் முழுக்க செய்திகளுக்கு இப்போது மறுப்புத் தெரிவித்துள்ளார் ரஜினி மகள் சௌந்தர்யா.
சில தினங்களுக்கு பெங்களூர் நைஸ் ரோடில் ராணா படப்பிடிப்பு தொடங்கி விட்டதென்றும், ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் படமாக்கினார் என்றும் முன்னணி தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
படத்தின் தொழில்நுட்ப இயக்கநரும் இணை தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி, இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "அப்பா பெங்களூர் போனது உண்மைதான். ஆனால் ராணா படப்பிடிப்பில் பங்கேற்றார் என்பது அடிப்படையில்லாத செய்தி. வெறும் வதந்தி. ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து அப்பாவே அறிவிப்பு வெளியிடுவார்," என்றார்.


Click it and Unblock the Notifications












