Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாரிசு நடிகர்கள் மீது விமர்சனம்... கார்த்திக்கு வந்த ஆத்திரம்!
நடிகரின் மகனாக இருப்பதால் சீக்கிரம் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்ற விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் பேசினார்.
"சிறுத்தை எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது...", என்று மிதப்புடன் ஆரம்பித்தார்.
உடனே ரசிகர் ஒருவர், "உங்கள் படங்களில் பிரமாதமான வெற்றி என்றால் பருத்தி வீரன் ஒன்றுதான். மற்றவற்றை அப்படி சொல்ல முடியாதே?" என்றார்.
உடனே, இல்லையில்லை, எனது எல்லா படங்களும் வசூலில் பெரும் வெற்றி பெற்றன என்றார்.
அடுத்த ரசிகர், சிவகுமார் மகன் என்பதால் சீக்கிரம் பிரபலமாகிவிட்டீர்கள், என்றார்.
உடனே கார்த்தி, "சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் விமர்சிக்கின்றனர். நான் உதவி இயக்குனராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். வாரிசு நடிகர் என்பதால் இஷ்டத்துக்கும் விமர்சிக்ககத் கூடாது" என்றார் ஆத்திரத்துடன்.
சினிமாவில் என் அண்ணன்தான் எனக்கு குரு, ரோல்மாடல் என்றும் அவர் குறிப்பிட்டார்.