Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாரிசு நடிகர்கள் மீது விமர்சனம்... கார்த்திக்கு வந்த ஆத்திரம்!
நடிகரின் மகனாக இருப்பதால் சீக்கிரம் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்ற விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் பேசினார்.
"சிறுத்தை எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது...", என்று மிதப்புடன் ஆரம்பித்தார்.
உடனே ரசிகர் ஒருவர், "உங்கள் படங்களில் பிரமாதமான வெற்றி என்றால் பருத்தி வீரன் ஒன்றுதான். மற்றவற்றை அப்படி சொல்ல முடியாதே?" என்றார்.
உடனே, இல்லையில்லை, எனது எல்லா படங்களும் வசூலில் பெரும் வெற்றி பெற்றன என்றார்.
அடுத்த ரசிகர், சிவகுமார் மகன் என்பதால் சீக்கிரம் பிரபலமாகிவிட்டீர்கள், என்றார்.
உடனே கார்த்தி, "சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் விமர்சிக்கின்றனர். நான் உதவி இயக்குனராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். வாரிசு நடிகர் என்பதால் இஷ்டத்துக்கும் விமர்சிக்ககத் கூடாது" என்றார் ஆத்திரத்துடன்.
சினிமாவில் என் அண்ணன்தான் எனக்கு குரு, ரோல்மாடல் என்றும் அவர் குறிப்பிட்டார்.