Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அசின், வித்யா பாலனிடம் பேசவே இல்லையே?- ரவிக்குமார் பேட்டி
ராணா படத்தில் அசின், வித்யா பாலன் நடிப்பதாக வந்த செய்திக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதேபோல அவர்கள் நீக்கம் என்பதும் தவறான செய்தி, என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.
இதுகுறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாராகிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
வேறு எந்த நடிகையையும் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அசினிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம்பியதால் அவரை நீக்கி விட்டதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.
அவரை இந்தப் படத்துக்கு நாங்கள் யோசிக்கவே இல்லை. வித்யாபாலனையும், சில பிரச்சினைகளால் நீக்கியதாக வந்த செய்தியும் வதந்திதான். இந்தப் படத்தில் நடிக்குமாறு அவரிடம் நாங்கள் பேசவே இல்லை.
அடுத்து ரேகா விவகாரம். இதுவும் முழுக்க முழுக்க கற்பனேயே.
கதாநாயகிகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம். தீபிகா படுகோனேயை தவிர வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. ராணா படம் 17-ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதைக் களம் கொண்டது.
படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கும். ஈராஸ் மற்றும் ஹரா பட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரஜினி மகள் சௌந்தர்யா இதில் டெக்னிக்கல் டைரக்டராக பணியாற்றுகிறார்.
இந்தப் படம் தொடர்பாக தேவையில்லாத கற்பனைகளைத் தவிர்க்க, ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து செய்திகளைத் தரத் திட்டமிட்டுள்ளோம். எனவே அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்றார்.
படம் தொடர்பாக கே.எஸ்.ரவிக்குமாரே இப்படி அடிக்கடி செய்திகளைக் கொடுத்தால் வதந்திகளைக் குறைக்கலாமே...!
-
எதே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. அப்போ அவர் சொன்னது என்ன ஆச்சு?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை