என் தோழி நமீதா... - உருகும் சினேகா
நான் கவலையோடு இருக்கும்போது எனக்கு ஆறுதலாக இருப்பவர் என் அன்புத் தோழி நமீதாதான், என்று கூறியுள்ளார் சினேகா.
நான் அவனில்லை படத்தில் நடித்தது முதல் நடிகைகள் சினேகாவும் நமீதாவும் நெருங்கிய தோழிகள். நமீதா சென்னை வரும் போதல்லாம் சினேகாவை சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். சமீபத்தில் கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றனர்.
அங்கு இணைந்து ஆட்டம் பாட்டு என கலக்கினர். லண்டன் கடை வீதிகளிலும் ஒன்றாக சுற்றி ஷாப்பிங் செய்தனர்.
நமீதாவுடனான நட்பு பற்றி சினேகா கூறும்போது, "நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருந்தாலும் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். எங்களுக்கும் மற்றவர்கள் போல் எல்லா உணர்ச்சிகளும் உள்ளது.
எனக்கு கவலைகள் மன அழுத்தங்கள் வரும் போதெல்லாம் மும்பையில் இருக்கும் நமீதாவுக்குதான் போன் செய்வேன். அவர் எனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்வார். நான் மனம்விட்டு பேசுகிற தோழியாக நமீதா இருக்கிறார். அவரை மிகவும் நேசிக்கிறேன். எனது அம்மா, அப்பாவை தாண்டி எனக்குள்ள ஒரே பலம். நமீதாவின் நட்பு," என்றார்.
பலமான நட்புதான்!


Click it and Unblock the Notifications











