twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருதால் நெருக்கடி..பிரியா மணி

    By Staff
    |

    Priyamani
    தேசிய விருது கிடைத்து விட்டது என்பதற்காக நடிப்புக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த வட்டத்திலிருந்து மீண்டு வரவே விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.

    பருத்தி வீரன் படத்தில் நடித்ததால்தான் பெரும் பிரேக் கிடைத்தது பிரியா மணிக்கு. ஆனால் ஏண்டா அந்தப் படத்தில் நடித்தோமோ என்று புலம்பாத குறையாக அவரது நிலைமை ஆகி விட்டது.

    கூடவே தேசிய விருதும் கிடைத்து விட்டதால், ஆர்ட் பட நாயகி ரேஞ்சுக்கு பிரியா மணியை அத்தனை பேரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் அப்செட் ஆகியுள்ளார் பிரியா மணி.

    இந்த வளையத்திலிருந்து வெளியே வரும் நோக்கிலேயே பாவாடை தாவணியை மறந்து விட்டு கவர்ச்சியின் பக்கம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் பிரியாமணி.

    தற்போது மணிரத்தினத்தின் ராவணா படத்தில் நடித்து வரும் பிரியா மணி, அடுத்து கன்னடத்தில் முதல் முறையாக நடிக்கப் போகும் (புனீத் ராஜ்குமார்தான் ஜோடி) ராம் படத்திற்கு தயாராகி வருகிறார்.

    இந்த நிலையில் ஏன் கவர்ச்சிகரமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான பதிலைத் தருகிறார் பிரியா மணி. தெலுங்கில் நடித்த துரோணா படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் வந்திருந்தார் பிரியாமணி.

    இதுகுறித்து அவர் கூறுகையில், துரோணா படத்தில் எனது காஸ்ட்யூமை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். பிகினி அணிவதில் என்ன தவறு இருக்கிறது.. ரோலுக்குத் தேவைப்பட்டது அணிந்தேன். அது தவறா..

    எப்போதாவதுதான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைக்கும். கமர்ஷியல் சினிமாதான் முக்கியமானது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நான் இழக்க விரும்பவில்லை. அதனால்தான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற இமேஜிலிருந்து வெளியே வர துடிக்கிறேன்.

    நடிப்புடன் கூடிய படங்களுடன் கமர்ஷியல் படங்களையும் சம அளவில் செய்ய விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X