Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விவாகரத்துக்குப் பிறகுதான் நிறைய வாய்ப்பு வருது! - சோனியா அகர்வால்
செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்ட பிறகு ஏராளமான வாய்ப்புகள் வருவதாக நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
சமீபத்தில் சோனியா அகர்வால் அளித்துள்ள பேட்டியில், அவர் இப்போது நடிக்கும் படங்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், "விவாகரத்துக்கு பின் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன்.
சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் அதற்காக பொறுமையாகவும் கவனமாகவும் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.
வானம் படத்துக்குப் பிறகு இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். நல்ல கதை. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கவர்ச்சியை பொருட்டாக நினைக்கவில்லை. கதாநாயகியை முதன்மைபடுத்தும் படமாக இருந்தால் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
எல்லா கேரக்டர்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும். தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். கதாநாயகி என்றில்லாமல், கதையில் முக்கியத்துவம் உள்ள நாயகியாகவும் நடிக்க தயாராகிவிட்டேன்," என்று கூறியுள்ளார்.