இளையராஜாவுடன் விருது...இரட்டிப்பு சந்தோஷம்!-ரஹ்மான்

By Staff

A R Rahman
'இளையராஜாவும் நானும் ஒரே குடும்பம்தான். அவருக்கும் எனக்கும் ஒரே சமயத்தில் 'பத்மபூஷண்' விருது கிடைத்திருப்பது, இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது' என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

பத்மபூஷண் விருது கிடைத்திருப்பது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

"பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இப்போது, பத்மபூஷண் விருது கிடைத்திருப்பது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பெரிய கவுரவமாக இதை கருதுகிறேன். பொறுப்பு அதிகமாகி இருக்கிறது.

கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. என் இசை பள்ளியை மேலும் விரிவுபடுத்தப்போகிறேன்.

என் இசையில் இந்த ஆண்டு, விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன், சுல்தான் தி வாரியர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. புதிய தமிழ் படங்களை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.

மீண்டும் நான் அமெரிக்க போகிறேன். மேலும் ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

இளையராஜாவுக்கும், எனக்கும் ஒரே சமயத்தில் பத்மபூஷண் விருது கிடைத்திருப்பது, இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது. எங்க அப்பா சேகர் இசையில், இளையராஜா வாசித்து இருக்கிறார். இளையராஜா இசையில், நான் பல ஆண்டுகள் வாசித்துள்ளேன்...

அந்தவகையில் நாங்கள் ஒரே குடும்பம்தான், இது குடும்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் சேர்த்து எனக்கும் விருது தந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.,'' என்றார் ரஹ்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X