Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'காதலாவது கத்தரிக்காயாவது...'! - சினேகாவின் சலிப்பு
அந்த நேரம் பார்த்து இருவரும் ஜோடியாக சினிமா விழாக்களுக்கு வருவது, சிறப்புக் காட்சிகள் பார்ப்பது என மேலும் கிசுகிசுக்களுக்கு இடம் கொடுத்தனர். அச்சமின்றி அச்சமின்றி வெளியாகி, சத்தமின்றி பெட்டிக்குள் போன கையோடு இவர்களின் காதல் கிசுகிசுக்களும் காணாமல் போயின.
அடுத்த சில மாதங்கள் கழிந்தது. இப்போது மீண்டும் இருவரையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரபரப்பாகக் கிளம்பியுள்ளன.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற அளவுக்குப் போய்விட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் சினேகாவிடம் கேட்டால், முன்னிலும் அப்பாவியாக, அப்படியா? என்கிறார்.
"இதுக்கு முன்ன எத்தனையோ நடிகர்களோட இணைச்சுப் பேசிட்டாங்க. அப்போல்லாம் நான் ரொம்ப டென்ஷனாயிடுவேன். ஆனா இப்போ சகஜமாயிடுச்சி. பிரசன்னாவோட முன்பு சேர்த்துப் பேசியபோது இருந்ததைவிட இப்ப கூலான மனநிலைக்கு வந்துட்டேன். யாரோடயும் காதலுமில்ல, கத்தரிக்காயுமில்ல... அடுத்து நான் நடிச்ச பவானி படம் வருது. அதுலதான் என் கவனமெல்லாம்" என்றார்.
ஒருவேளை படம் ரிலீஸானதும் வழக்கம்போல இந்த கிசுகிசுவும் அடங்கிடுமோ!