Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம் சொன்ன பதில்!
தெய்வத் திருமகளில் அனுஷ்காவோடு நடிச்சீங்க... ராஜபாட்டையில் தீக்ஷா சேத்துடன் நடிக்கிறீங்கள்... இவங்க ரெண்டு பேர்ல யார் டாப்?
எடுத்த எடுப்பில் இப்படியொரு கேள்வியை நிருபர்கள் கேட்க கொஞ்சம் ஆடித்தான் போனார் விக்ரம், ராஜபாட்டை பத்திரிகையாளர் சந்திப்பில்.
ஆனாலும் அவரது பதிலில் அநியாயத்துக்கு யதார்த்தம் வழிந்தது.
"நிச்சயமா அனுஷ்காதான் பெஸ்ட். காரணம், அனுஷ்காவோட நடிப்புத் திறமை நிரூபிக்கப்பட்ட ஒன்று. தீக்ஷா இப்போதான் நடிக்க வந்திருக்காங்க. அழகில் அனுஷ்காவுக்கு இணையா தீபிகா இருக்கலாம். ஆனால் நடிப்பில் அனுஷ்காதான் டாப்.
வேணும்னா இன்னும் சில படங்கள் தீக்ஷாவோட நடிச்ச பிறகு அவங்க நடிப்புத் திறமை பத்தி சொல்றேன்," என்று விக்ரம் கூற, கைதட்டி அதை ஏற்றுக்கொண்டார் பக்கத்திலமர்ந்திருந்த தீக்ஷா சேத்.
ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறுகையில், "ஒரு பக்கம் பிதாமகன், தெய்வத் திருமகள் மாதிரி படங்களில் நடிச்சாலும், தில், துள், சாமி மாதிரி முழு கமர்ஷியல் படத்தில் நடிக்கணும்னு எனக்கு நிறைய ஆசை.
ஆனால் அது வெறும் கமர்ஷியல் மசாலாவா இல்லாமல் நல்ல கதையோடும் இருந்தால்தான் மக்களிடம் மரியாதையான வரவேற்பிருக்கும். அந்த மாதிரி ஒரு கதைக்காக காத்திருந்த போதுதான் சுசீந்திரன் வந்து இந்த கதையை சொன்னார்.
அவருடைய முந்தைய படங்களையெல்லாம் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் இது சுசீந்திரன் படம்தானா என்பதை நம்பவே மாட்டார்கள். அவருக்குள் அப்படியொரு கமர்ஷியல் டைரக்டர் இருக்கிறார்," என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, "அஞ்சு பாட்டு, நாலு பைட்னு படத்தின் பெரும்பகுதியை டான்ஸ் மாஸ்டரும், பைட் மாஸ்டரும் பிரிச்சிக்கிட்டாங்க. நான் அவங்க வேலையை மேற்பார்வை பார்த்தேன் என்பதுதான் சரி. ஆனால் இந்தப் படம் வெறும் கமர்ஷியல் எல்லைக் கோட்டை தாண்டி, பேச வைக்கும்," என்றார்.
பிவிபி சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இனிய அனுபவம் காரணமாக, மீண்டும் சுசீந்திரனுக்கே கால்ஷீட் தந்துள்ளார் விக்ரம்!