ஹீரோயின் படத்திலிருந்து நீக்கினால் வழக்கு! - ஐஸ்வர்யா ராய் முடிவு

ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகியுள்ளதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
ஆனால் இன்னொரு புறம் கர்ப்பத்தை காரணம் காட்டி ஐஸ்வர்யாவின் திரையுலக மார்க்கெட் சரிகிறது. இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் ஹீரோயின் என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்துக்கு ஐஸ்வர்யாராயை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
அடுத்த மாதம் இந்த படத்தின் படிப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமான தகவல் அவரை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஐஸ்வர்யா ராயை நீக்கி விட்டு கத்ரீனா கபூர் அல்லது பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதில் கோபமடைந்த ஐஸ்வர்யா ராய், தன்னை நீக்கப்போவதாக இயக்குநர் கூறியுள்ளதைக் கண்டித்து நெருக்கமானவர்களிடம் காரசாரமாக பேசி திட்டி வருகிறார்.
அத்துடன் ஹீரோயின் படத்தில் இருந்து நீக்கப்பட்டால் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் இந்தக் கோபத்தைப் பார்த்த பிறகுதான், படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கப்படவில்லை என தயாரிப்பாளர்களான யுடிவி நிறுவனத்தினர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











