Don't Miss!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல்ஹாசன் எனக்கு குரு, கூறுகிறார் திரிஷா
சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் திரிஷா. காரணம், கமல். அவருடன் சேர்ந்து நடித்துள்ள மன்மதன் அம்பு படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் திரிஷா.
படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு கமல்ஹாசனையும் வெகுவாகப் புகழ்கிறார். குறிப்பாக சிங்கப்பூரில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தான் பாடல் பாடியதையும், கமலுடன் இணைந்து கவிதை வாசித்ததையும் கூறி சிலாகிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன் தான் என்னிடம் அக்கறை காட்டி பாடவும், கவிதை வாசிக்கவும் ஊக்கம் கொடுத்தார். இதனால்தான் என்னால் அதை சிறப்பாக செய்ய முடிந்தது. இதனால் என்னைப் பொறுத்தவரை கமல் சார் ஒரு குரு.
இப்படத்தில் நான் வளரும் நடிகையாக நடித்துள்ளேன். சரியான ரொமான்டிக் காமெடி இது என்றார் திரிஷா.
திரிஷா இப்போது அஜீத்துடன் மங்காத்தா, தெலுங்கில் வெங்கடேஷுடன் சாவித்திரி ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம்.