Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நல்ல நடிகர்கள் உருவாக வேண்டும்!-கமல்
சமீபத்தில் ஹைதராபாத் சென்ற கமல், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் பாலச்சந்தர் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். இன்று வரை எங்கள் ஆட்சி தொடர்கிறது என்பது உண்மையே. இன்றைக்கு நிறைய புதியவர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்ல நடிகர்களாக வர வேண்டும்.
ஐஎஸ்ஐ போதும் எனக்கு!
ஒவ்வொரு முறை ஆஸ்கர் குறித்து பேச்சு வரும்போதும் எனது படங்கள் குறித்தும் பேசப்படுகிறது. இதை நான் விரும்பவில்லை. காரணம் எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை.
இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தியே எனக்குப் போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க தரத்திலான படங்களுக்கு வழங்கப்படுபவை. என் படங்களில் இந்தியத் தரத்தில் இந்தியர்களுக்காக எடுக்கப்படுபவை. எனக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறது. ஏ.எஸ்.ஐ. முத்திரை எதற்கு?
அதேபோல எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசுவது போல ஆங்கிலம் பேச வராது. ஒரு இந்தியன் பேசும் ஆங்கிலம்தான் வரும். நான் சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.
ஒரு பேச்சுக்கு கேக்கறேன்... ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தாலும் தெரியும்.
மர்மயோகி என்னாச்சு?
எனக்கு பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளன. அந்த கஷ்டங்கள் நீங்கியதும் எனது புதிய படங்கள் ஆரம்பமாகும். மருதநாயகம் படம்கூட கைவிடப்படவில்லை. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள்தான் பாக்கி உள்ளன. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நிச்சயம் மருதநாயகமும் வரும், மர்மயோகியும் வரும்.
நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எனக்கு நடிக்க மட்டும்தான் தெரியும், திரையில். தெரிந்த தொழிலை நிம்மதியாக செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!