அவங்கெல்லாம் தங்கம்... நான் மட்டும் பிளாட்டினம்! - ஸ்ரேயா

தமிழ் சினிமாவில் உண்மையில் எந்த நாயகிக்கும் பெரிய மவுசும் இல்லை, மார்க்கெட்டும் இல்லை. எல்லாப் படங்களுமே ஹீரோக்களின் தயவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சரியான நாயகிகள் இல்லாததால், இருக்கிறவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உள்ளனர்.
புதிய கதாநாயகிகள் வரவு குறைவாக இருப்பதாலேயே இந்த நிலை. எனவேதான் அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் புதிய நாயகிகளை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
ஆனால் இன்னொரு பக்கம், நான்தான் நம்பர் ஒன் என்று அடித்துக் கொள்ளாத குறையாக அக்கப்போரில் ஈடுபட்டுள்ளனர் இப்போதுள்ள நாயகிகள். சும்மா ஒப்புக்கு, எனக்கு இந்த நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை என்று 'பீலா' விடுவார்கள்.
இதோ சமீபத்தில் ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டி.
நயன்தாரா, தமன்னா, த்ரிஷா போன்றவர்களால் உங்களுக்கு படங்கள் வருவது குறைந்துவிட்டதா?
"யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது. நான் எப்பவும் பிஸி. நீங்க சொல்ற நயன்தாரா, த்ரிஷா, தமன்னா இவங்கள்லாம் தங்கம்னா, நான் பிளாட்டினம். தங்கத்துக்கும் ப்ளாட்டினத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?" என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.
ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்ற பழைய பழமொழிதான் நினைவுக்கு வந்தது!


Click it and Unblock the Notifications











