மார்க்கெட் இருந்தா ஒரு கோடி... இல்லேன்னா கடைகோடி! - இலியானா தத்துவம்

By Shankar

பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.

பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.

சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.

நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.

இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.

எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.

தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.

சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X