Just In
- 13 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 13 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 14 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 14 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
உலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்க்கெட் இருந்தா ஒரு கோடி... இல்லேன்னா கடைகோடி! - இலியானா தத்துவம்
பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.
பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.
சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.
நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.
இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.
எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.
தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.
சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.