'பூ'வுக்குப் பிடித்த முத்தம்!

By Staff

Parvathi
முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. காட்சிக்குப் பொருத்தமானதாக இருந்தால் தாராளமாக நடிக்கலாம் என்கிறார் பூ நாயகி பார்வதி.

மலையாளத்திலிருந்து பூ மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. அந்தப் படத்திற்குப் பிறகு டக்கென கன்னடத்திற்குத் தாவி விட்டார்.

மலே பரலி, மஞ்சு இரலி என்ற படத்தில் நடித்து வரும் பார்வதி, இப்படத்தில், நாயகன் ஸ்ரீநகர் கிட்டியுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். இதனால் கன்னட ரசிகர்கள் பரபரப்பாகிக் கிடக்கிறார்கள்.

பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பமா என்று வியந்து போய் பார்வதியிடம் கேட்டால், நடிப்பில் எல்லாமே உண்டு. முத்தம் பெரிய விஷயமில்ல, புதிய விஷயமும் இல்லை.

பல்வேறு வகையான உணர்வுகளை சினிமாவில் காட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான் முத்தம். காட்சிக்குப் பொருத்தமாக இருந்தால் நடிக்கலாம்.

கணவன், மனைவிக்கு இடையே முத்தம் இல்லாமல் இருக்குமா, காதலில் முத்தம் இல்லாத காதல் எங்கேனும் உண்டா. இதைத்தானே சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் என்ன தவறு. நிஜத்தைத்தான் காட்டுகிறார்கள்.

முத்தம் இருக்காமே என்று நினைத்து யாரும் படம் பார்க்க வரக் கூடாது. அப்படி வந்தால்தான் தவறு என்கிறார் பார்வதி.

பூ படத்தில் வந்து போன பொண்ணா இது என்று ஆச்சரியா இருக்குல்ல..?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X