Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'3' படக் கதையை வாழ்க்கையில் நேரில் பார்த்திருக்கிறேன் - ராதிகா பாராட்டு!
இந்தப் படத்தை நேற்று பார்த்த ராதிகா, உடனடியாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவைப் பாராட்டினால்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "3 படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன நோய் வந்துவிட்டது.
இந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அந்த இளைஞனின் நினைவுதான் எனக்கு வந்தது. என்னை மிகவும் பாதித்த சம்பவம் அது.
மிகவும் உணர்வுப் பூர்வமான கதையை ஐஸ்வர்யா தேர்வு செய்து இயக்கியுள்ளார். பெரிய துணிச்சல் வேண்டும். காட்சிகளை மிக கச்சிதமாக அமைத்துள்ளார். தனுஷும், சுருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.
மேலும் படம் குறித்த தனது கருத்துக்கலை ட்விட்டரிலும் எழுதியுள்ளார்.
இயக்குநராக ஐஸ்வர்யாவின் திறமை குறித்து ரஜினியிடம் பேசியபோது, அவர் மிகவும் மகிழ்ந்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.