Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி, கஜினி, டோணி ஒன்றாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை-அமிதாப்
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கஜினி' ஆமிர்கான் மற்றும் டோணி ஆகியோர் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதாவது அவர் இந்திய அணி விளையாடுவதை டிவியில் பார்க்க மாட்டாராம். அப்படிப் பார்த்தால் இந்தியா தோற்று விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் நேற்று அவரால் அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்.
போட்டியை முழுமையாக வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்த்துள்ளார் அமிதாப். அந்த அனுபவத்தை ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார் அமிதாப்.
என்னால் டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை இந்தியா எடுத்திருந்தபோது ஏன் டிவி முன்பு உட்கார்ந்தோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப் போக என்னால் எழுந்திருக்க முடியவில்லை. டோணி அடித்தாரே அந்த கடைசி சூப்பர் சிக்ஸ், அதை விளக்கவே வார்த்தை இல்லை.
அதுசரி, ஒரே இடத்தில் ரஜினி, கஜினி (ஆமிர்கான்), டோணி ஆகியோர் இருந்தால், சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாதே!.
ஏதோ நாடே சுதந்திரமடைந்தது போல இந்த வெற்றியை மக்கள் கொண்டாடியது என்னைக் கவர்ந்துள்ளது. என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு ஆட்டம். அட்டகாசமான போட்டி. என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அமிதாப்.