Don't Miss!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
1977ஐ எதிர்பார்க்கும் சரத்
தீபாவளிக்கு ரீலிசாக வேண்டிய படம் தற்போது பொங்கலும் முடிந்த நிலையில் விரைவில் வெளிவரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் விளம்பர படங்கள் எடுத்து வந்த தினேஷ் குமார் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் சரத் குமார் தனது வெற்றி பார்மூலாவான அப்பா-மகன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை 1977ல் நடப்பதாக அமைந்திருப்பதால் அதையே பெயராக வைத்துள்ளனர்.
இரண்டு ஹீரோயின்களாக நமீதாவும், பர்ஷானாவும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் தினேஷ் குமார் கூறுகையில்,
ஹாலிவுட்டுக்கு இணையாக பேசப்படும் படம். தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். எனக்கு சரத் குமாரை பல ஆண்டுகளாக தெரியும்.
படத்தில் அவரது பாத்திரம் பிரமாதமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது உங்களுக்கே அது புரியும். நமீதா வக்கீலாக நடிக்கவிருக்கிறார். கதையில் அவரது கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என்றார்.