பரீட்சைக்காக படத்தை மறுத்த பார்வதி!

இது குறித்து பார்வதி கூறுகையில்,
பூ படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச பட விழாவிலும் பூ திரையிடப்பட்டது. அதன் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இப்போது கன்னடத்தில் 'மலை வர்லே மஞ்சு விர்லி' படத்தில் நடித்து வருகிறேன்.
ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிக்க வேண்டும்; அதுவும் அர்த்தமுள்ள படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதன்படிதான் படங்களை ஏற்கிறேன்.
சமீபத்தில் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பூ படம் தயாரித்த மோசர் பேர் நிறுவனம்தான் இதைத் தயாரிக்கிறது.
இதில் ஜெய் ஹீரோ. இதுவும் புதுமையான கதை கொண்ட படம். ஆனால் கன்னட படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்க முடியாத சூழல். காரணம், பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறேன். மார்ச்சில் பரீட்சை வருகிறது. அதனால் இப்படத்தை ஏற்கவில்லை.
இந்தப் பட வாய்ப்பு போனால் போகட்டும். படிப்பு முக்கியமில்லையா..., என்றார் பார்வதி.
நியாயம்தான்!


Click it and Unblock the Notifications











