Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபுதேவா 'ஆர்டர்'... சினிமாவிலிருந்து விலகுகிறேன்! - நயன் பரபர பேட்டி
பிரபுதேவாவும், நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்கிறார். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஜுன் மாதம் இதற்கான தீர்ப்பு வருகிறது.
நயன்தாரா தற்போது ராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருக்கு கடைசி படமாம். இந்த படத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகப் போவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
உத்தமி பாத்திரத்தில்...
இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று பிரபுதேவா வற்புறுத்தியுள்ளார். அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இனி நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். திருமணத்துக்கு பின் நடிக்க மாட்டேன். தெலுங்கில் நான் நடித்து வரும் ராமராஜ்ஜியம் படம் தான் எனது கடைசி படம். இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்கிறேன்.
ஒரு உத்தமி கேரக்டரில் நடித்து விட்டு சினிமாவுக்கு நான் முற்றுப்புள்ளி வைப்பது திருப்தியாக உள்ளது. என் வேடம் அற்புதமானது. திரையுலக வாழ்க்கையில் நான் நடிக்கும் இந்த சீதை வேடத்தை மறக்க முடியாது மிகவும் மன நிறைவை அளித்துள்ளது.
எனது அனைத்து திறமைகளையும் சீதை கேரக்டரில் வெளிப்படுத்துவேன். பத்ம பூஷன் விருது பெற்ற நாகேஸ்வரராவும் இதில் நடிப்பது இரட்டிப்பு சந்தோஷம்.
பிரபுதேவாவுக்கும், எனக்கும் தகராறு நடப்பதாக வதந்திகள் பரவியுள்ளன. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது போன்ற செய்திகளை யார் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இவைகளை நான் பொருட்படுத்தவும் இல்லை. ராமராஜ்ஜியம் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம். திருமணத்துக்கு பின் நல்ல மனைவியாக குடும்ப பெண்ணாகவும் இருக்க விரும்புகிறேன்.
மலையாளத்தில் நான் நடித்த பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் ஜோடியாக நடிக்க என்னைத்தான் முதலில் அழைத்தனர். நான் மறுத்து விட்டேன்..." என்றார் நயன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!