Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு...
இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ - அமைதிப்படை 2 படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமனுக்கு மகளாக அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தவரை படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.
ஸ்போர்ட்ஸ் வுமனாக இருந்தவர் எப்படி நடிக்க வந்தீர்கள்... நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..?
விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதான் நடிக்க வந்துவிட்டேன்.
நாகராஜசோழனில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன். வீட்டில் அப்பா அம்மாவுக்கு மிகவும் அடங்கிய பெண்ணாக நடிக்கும் அதே வேளையில் அநீதி கண்டு பொங்கும் வீரத் தமிழ்ப் பெண்ணாக என் பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்... படத்தைப் பார்க்கும் சகோதரிகள் தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல உணருவார்கள்...
இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ்.....எனது தாய்மாமனாக இயக்குனர்- நடிகர் சீமான் நடித்திருக்கிறார்...
எனக்கு அவரைச் சிறந்த இயக்குனராகத்தான் தெரியும். ஆனால் படப்பிடிப்பின் போதுதான் தெரிந்தது அவர் அற்புதமான நடிகரும் கூட என்பது... அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன்...
இயக்குனர் மணிவண்ணனைப் பற்றி...
அவரை திறமைகளின் சிகரம் எனலாம்...அவரது 50 வது படம் , இன்னும் முதல் படத்தை இயக்குவதைப் போல அவ்வளவு சிரத்தை.. அவ்வளவு சுறுசுறுப்பு..எல்லாவற்றுக்கும் மேல் ஜனரஞ்சகமாக யோசிக்கும் ஆற்றல் அபாரம்... செட்டுக்கு வெளியே அவர் மிகவும் இயல்பான ஜாலியான மனிதர்... செட்டுக்குள் வந்துவிட்டாலோ செம ஸ்டிரிக்ட்... அவரது செட் மிகவும் டிசிப்ளின் ஆக இருக்கும்... பெர்பெக்ஷன் வரும் வரை விடமாட்டார்... அதே நேரம் அவரவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதை அருமையாக விளக்கிச் சொல்லி அவர்களை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவார்... திறமைசாலிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக வெளிக் கொணர்வதில் வாங்குவதில் அவருக்கு நிகர் அவரே..
படப்பிடிப்பின் போது ஏதாவது சுவையான அனுபவம்...
நான் சைவம்.... அசைவ உணவுகளைக் கண்டாலே அலர்ஜி... இதை அறிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் படப்பிடிப்பின் போது அசைவ உணவுகள் வரும் இடங்களில் அதன் வாசனை என்னை அணுகாதவாறு பெர்பியூம் அடித்து விடுவார்... நான் ஒரு சாதாரண நடிகைதான். இருந்தாலும் அந்த வாசனையால் நான் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவ்வாறு அவர் சிரத்தை எடுத்துக் கொண்டதை நிஜமாகவே மறக்க முடியாது...
நாகராஜ சோழன் ஸ்பெஷல் என்ன...
இயக்குனர் மணிவண்ணனின் படங்களை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லலாம்... அவரது அன்றைய டயலாக்குகள் இன்றும் இளமையாக இருக்கின்றன.. இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்திப் போகின்றன...
இந்தப் படத்தில் இதுவரை இருக்கும் அரசியலை அவருக்கு உரித்தான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்... யாரையும் புண்படுத்தாமலும் யாரையும் சுட்டிக்காட்டாமலும் பொதுவான அரசியலைச் சொல்லியிருக்கிறார்.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முழு நீளப்பொழுது போக்கோடு அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து சத்யராஜுடன் இரண்டு படங்கள்...?
முதலில் சத்யராஜ் சாரைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்... ஒரு ஜூனியர் என்றும் பார்க்காமல் சகஜமாக அவர் என்னை நடத்தினார்... மேலும் அவரைப் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது தூர இருந்தே நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது. மற்றபடி அவரது திறமையைப் பற்றியோ டைமிங்கினைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை... அவரது 200 வது படமான நாகராஜ சோழன் படத்தில் அவருடன் நடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரண்டு வருடத்தில் அவருடன் இரண்டு படங்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வுதான்.
இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்கள்... ஏன் அதிகமாக ஒப்புக் கொள்ளவில்லை?
நான் நல்ல கதைகளில், கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன். எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் எனபது முக்கியமில்லை... எனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.. அது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறதா என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
சவாலான கதாபாத்திர அமைப்புடன் கூடிய முழு நீளக் கதாநாயகியாக நடிக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது... பார்க்கலாம்.
விளையாட்டு வீராங்கனை - நடிகை... என்ன வித்தியாசத்தை உணர்கிறார்கள்?
விளையாட்டு என்பது அதிமாக உடலுழைப்பைச் சார்ந்திருக்கிறது... மனதளவில் ஜெயிக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் போதுமானாது...
நடிப்பு என்பது முழுக்க முழுக்க வெளிக்காட்டும் பாவங்களைச் சார்ந்து இருக்கிறது... உடல்மொழியுடன் சிறந்த முகபாவனைகளையும் வெளிப்படுத்த வேண்டும்... மேலும் நடிக்கும் போது நம்மால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களாக வாழமுடியும்... அதற்கு நடிப்பு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறது...
விளையாட்டு வீரராக இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்தையும் உடலமைப்பையும் சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது!