கார்ப்ரேட் பர்சனா மட்டும் இல்ல.. வித்தியாசமாவும் நடிக்கனும்.. மனம் திறந்த நடிகர் வர்கிஸ்!
சென்னை: கார்ப்பரேட் பர்சனாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான ரோல்களிலும் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறியிருக்கிறார் நடிகர் மேத்யூ வர்கிஸ்.
Recommended Video
அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் மேத்யூ வர்கிஸ். அந்தப் படத்தில் முரளிதரன் என்ற கதாப்பாத்திரத்தில் சிம்புவுக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேயாத மான் படத்தில் மதுவுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இதேபோல் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பிலிமி பீட் தளத்துக்கு நடிகர் வர்கிஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு முன்பே சில படங்களில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கத்தி படத்தில் கார்ப்பரேட் பர்சனாக நடித்திருப்பதாக கூறியிருக்கிறார். உயரமாக வெள்ளை முடியில் நல்ல நிறத்துடன் ரிச் லுக்கில் உள்ள வர்கிஸ்க்கு தொடர்ந்து பணக்கார அப்பா, உயர் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்களே வருவதாக கூறியுள்ளார்.
மேலும் ஒரு வில்லேஜ் அப்பா உட்பட வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் மேத்யூ வர்கிஸ்.


Click it and Unblock the Notifications











