நயன்தாரா செருப்ப காட்டி அவமானம்.. டாக்சிக் காதலன் அடித்த கொடுமை.. ஜாக்குலின்!
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் மற்றும் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஜாக்குலின். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான 'டாக்சிக்' (Toxic) காதல் குறித்தும், திருமணத்தின் மீது தனக்கிருக்கும் பார்வை குறித்தும் அதிரடியான பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
தன் கல்லூரி காலக் காதல் குறித்துப் பேசிய ஜாக்குலின், தனது எக்ஸ்-காதலன் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டான் என்பது குறித்து பேசிய அவர், அதில், கல்லூரி படிக்கும் போதே நான் ஒருவரை காதலித்து வந்தேன். அவன் மிகவும் டாக்சிக்கானவன். அவனுடன் எப்படி பழகினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருமுறை என் எக்ஸ் வீட்டில் அருகே நயன்தாரா மேடமின் படப்பிடிப்பது நடந்து இருக்கு.அவன் நயன்தாரா செருப்பை பார்த்துவிட்டு, அவங்க செருப்பு எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா என்று சொன்னான். எல்லாருமே அவங்க அழகை தான் பார்த்துத்தான் வர்ணிப்பார்கள். ஆனால், அவன் செருப்பை பார்த்து வர்ணித்தான். அது மட்டும் சொல்லி இருந்தால் பரவாயில்லை, அந்த செருப்பை ரசித்த அளவு கூட உன்னை நான் ரசிக்கவில்லை. நீ இன்னும் கொஞ்சம் உன்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னான். அதைக்கேட்டு நான் மிகவும் உடைந்து விட்டேன்.

விலகி விட்டேன்: எப்பொழுதுமே அவன் என்னை மோசமாகவே விமர்சித்து வந்தான் ஒரு கட்டத்தில் என்னை அடித்து விட்டான். அதன் பிறகு தான் இதற்கு மேல் இந்த உறவே தொடர்வது நல்லது இல்லை என முடிவு செய்து அவனை விட்டது விலகி வந்து விட்டேன். அதன் பிறகு தான் சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்து கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்தேன். பல ஆண்டுகள் கழித்து அவனுக்கு ஃபோன் செய்து, நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருக்கிறேன் மறந்துடாமல் அந்த படத்தை பாரு என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன் என்றார்.
திருமணம் என்பது ஒரு சிஸ்டம்: தொடர்ந்து திருமணம் குறித்து பேசிய ஜாக்குலின், எனக்கு திருமணத்தின் மீது விருப்பமே இல்லை. நான் பார்த்த வரையில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாரும் மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழவில்லை. என் அம்மா, என்னை சுற்றி இருப்பவர்கள். ஆனால் லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் கல்யாணம் என்பது ஒரு சிஸ்டம், அந்த சிஸ்டத்துக்குள் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ விருப்பம் இருந்தால் வாழலாம். இல்லை, திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு அந்த சிஸ்டத்திற்குள் சென்று இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. என்றாவது ஒருநாள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என ஜாக்குலின் அந்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். ஜாக்குலினின் இந்த போல்டான பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications