பயில்வான் பொண்ணு கதை தெரியுமா? யோக்கியம் மாதிரி பேசுறான்.. பயில்வான் ரங்கநாதனை விளாசிய நடிகை!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா பேகம் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட தாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தன்னை ஏமாற்றி 20 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த அவர் அந்த புகாரை இரண்டு நாளிலேயே வாபஸ் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து நடிகை ரிஹானா Agni News 24x7 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நான் தொழில் அதிபர் ராஜ் கண்ணனை முதல் முதலில் சந்தித்தது என்னுடைய தோழியின் மூலமாகத்தான் என்னுடைய தோழியுடன் தான், அவர் உறவில் இருந்தார். இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது நான், அவர்களின் சண்டையை சமாதானம் செய்வதற்குத்தான் நான் ராஜ் கண்ணணுடன் பேசினேன். அப்போது, தொழில் அதிபரின் வளர்ப்பு மகள் தியா என்பவள் என்னுடைய போன் நம்பரை வாங்கி, தொழில் அதிபரிடம் கொடுத்தார்.

நடிகை ரிஹானா: அப்போது அவர், NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அதன்பின் தான் அவன் சரியாக மோசடி ஆசாமி, அவனுக்கு எந்த வேலையும் இல்லை, பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருக்கும் பணத்தை மோசடி செய்வது தான் அவன் வேலையே. இதை தெரிந்து கொண்டேன். அவனிடம் என் பணம் மாட்டிக்கொண்டதால், அவனிடம் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்கினேன். திருமணம் செய்து கொண்டதாக வந்த போட்டோ என்னை ஏமாற்றி எடுத்த போட்டோ இதுபற்றி பல பேட்டியில் சொல்லிவிட்டேன்.
பயில்வான் யோக்கியமா: இப்படி என்னை பற்றி எதுவுமே தெரியாத பயில்வான் ரங்கநாதன். வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இன்று யோக்கியன் போல பேசும், பயில்வான் ரங்கநாதன் சினிமா உலகிற்கு வரும் போது மாமா வேலை பார்த்த தான், பெண்களை வைத்து பிசினஸ் செய்து தான், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இது சினிமா உலகில் இருக்கும் பலருக்கும் தெரியும். அதையெல்லாம் செய்துவிட்டு வயசான காலத்தில் யோக்கியன் மாதிரி பேசலாமா? அவருடைய பெண் ஒரு லெஸ்பியன். ஒரு பெண்ணுடன் அவருடைய மகள் குடும்பம் நடத்துகிறாள்.
வசமா மாட்டுவார்: அந்த நடிகை அப்படி, இந்த நடிகை இப்படி என்று அடுத்தவர்களின் கதையை பேசும் பயில்வான் ரங்கநாதன் என் மகள் ஒரு லெஸ்பியன் என மீடியாவில் முன்பு உட்கார்ந்து பேச வேண்டியதுதானே. தான் வீட்டு கௌரவம் மரியாதை போய்விடக் கூடாது என்று நினைக்கும் பயில்வான் ரங்கநாதன் மற்றவர்களின் குடும்ப கதையை பொதுவெளியில் எப்படி பேசலாம். நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள் அது எழுதப்படாத சட்டம் என பேசுகிறார். நடிகை என்றால் படுத்துதான் சம்பாதிப்பார்களா... அப்படி இருக்கும் போது எதற்கான அவர் சினிமாவிற்கு வந்தார். அவர் மாமா வேலை பார்த்துத்தானே சினிமாவில் அவர் வாய்ப்பை பெற்றார். நடிகை ரேகா நாயர் பீச்சில் பயில்வான் ரங்கநாதனை வச்சு செய்தார்கள். அதேபோல, என்னைக்காவது என்னைப் போன்றவர்கள் கையில் அவர் மாட்ட வேண்டும் அவரை வச்சி செய்து விடுவார்கள் என்று நடிகை ரிஹானா பேகம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











