Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நாமே நம்மை கேவலப்படுத்திக்கலாமா'... ஸ்ரீரெட்டிக்கு நடிகை சஞ்சனா கேள்வி! Exclusive
ஸ்ரீரெட்டி விவகாரம், கன்னட படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாக வெளியான செய்தி உள்ளிட்டவைகள் குறித்து நடிகை சஞ்சனா கல்ரானி ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்று தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை சஞ்சனா கல்ரானி தெரிவித்துள்ளார்.
ஒரு காதல் செய்வீர் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா கல்ரானி. இவர் நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி ஆவார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் தலைகாட்டாத சஞ்சனா, பல தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்று தொடரான இளைய தளபதியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த சஞ்சனாவை சந்தித்தோம். அப்போது அவரிடம் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, " நான் என் கண்ணால் பார்த்ததை மட்டுமே நம்புவேன். அல்லது வலுவான ஆதாரம் வேண்டும். இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம்.
பாலியல் தொல்லையை சந்திக்காமல் ஒரு நடிகை மேலே வரவே முடியாது என அவர் கூறுவது உண்மையல்ல. பாகுபலி மாதிரி ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு அந்த அளவுக்கு திறமை மற்றும் தகுதி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் பத்து கோடி கொடுத்தாலும், பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்கிறேன் என சொன்னாலும் இயக்குனர் ஏற்க மாட்டார்.
தமிழில் நடிகர் சங்கம், தெலுங்கில் மா என நடிகர், நடிகைகளுக்கென சங்கங்கள் இருக்கின்றன. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருமே ஒரு குடும்பமாக தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும் போது இதுபோன்று குற்றச்சாட்டுகளை கூறுவது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்வது போன்றது.
தென்னிந்தியாவுக்கென நல்ல கலாச்சாரம் இருக்கிறது. பெண்களை, நடிகைகள் மதிப்பவர்கள் நாம். நம்மை பூபோல் பார்த்துகொள்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் மீது இப்படி குற்றச்சாட்டு கூறுவது எனக்கு பிடிக்கவில்லை.
சங்கத்தில் பதிவு செய்யாத நபர்களை நம்பி செல்வது தவறான விஷயம். நடிக்க வந்த புதிதில் எனக்கும் இது போன்ற பிரச்சினைகள் இருந்தன. சிலர் என்னை தொடர்புகொண்டு, ஒரு தயாரிப்பாளர் அழைக்கிறார், நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என சொல்வார்கள். ஆனால் அவர்கள் திரைத்துறைக்கு சம்மந்தப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். நான் உடனடியாக அழைப்பை துண்டித்துவிடுவேன்.
இது போன்றவர்களிடம் இருந்து நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் நம்மை தவறாக பயன்படுத்திக்கொள்வர். முதலில் நம்மை நாம் மதிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் மதிப்பார்கள்", என அவர் தெரிவித்தார்.