Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நாமே நம்மை கேவலப்படுத்திக்கலாமா'... ஸ்ரீரெட்டிக்கு நடிகை சஞ்சனா கேள்வி! Exclusive
ஸ்ரீரெட்டி விவகாரம், கன்னட படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாக வெளியான செய்தி உள்ளிட்டவைகள் குறித்து நடிகை சஞ்சனா கல்ரானி ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்று தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை சஞ்சனா கல்ரானி தெரிவித்துள்ளார்.
ஒரு காதல் செய்வீர் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா கல்ரானி. இவர் நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி ஆவார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் தலைகாட்டாத சஞ்சனா, பல தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்று தொடரான இளைய தளபதியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த சஞ்சனாவை சந்தித்தோம். அப்போது அவரிடம் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, " நான் என் கண்ணால் பார்த்ததை மட்டுமே நம்புவேன். அல்லது வலுவான ஆதாரம் வேண்டும். இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம்.
பாலியல் தொல்லையை சந்திக்காமல் ஒரு நடிகை மேலே வரவே முடியாது என அவர் கூறுவது உண்மையல்ல. பாகுபலி மாதிரி ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு அந்த அளவுக்கு திறமை மற்றும் தகுதி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் பத்து கோடி கொடுத்தாலும், பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்கிறேன் என சொன்னாலும் இயக்குனர் ஏற்க மாட்டார்.
தமிழில் நடிகர் சங்கம், தெலுங்கில் மா என நடிகர், நடிகைகளுக்கென சங்கங்கள் இருக்கின்றன. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருமே ஒரு குடும்பமாக தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும் போது இதுபோன்று குற்றச்சாட்டுகளை கூறுவது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்வது போன்றது.
தென்னிந்தியாவுக்கென நல்ல கலாச்சாரம் இருக்கிறது. பெண்களை, நடிகைகள் மதிப்பவர்கள் நாம். நம்மை பூபோல் பார்த்துகொள்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் மீது இப்படி குற்றச்சாட்டு கூறுவது எனக்கு பிடிக்கவில்லை.
சங்கத்தில் பதிவு செய்யாத நபர்களை நம்பி செல்வது தவறான விஷயம். நடிக்க வந்த புதிதில் எனக்கும் இது போன்ற பிரச்சினைகள் இருந்தன. சிலர் என்னை தொடர்புகொண்டு, ஒரு தயாரிப்பாளர் அழைக்கிறார், நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என சொல்வார்கள். ஆனால் அவர்கள் திரைத்துறைக்கு சம்மந்தப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். நான் உடனடியாக அழைப்பை துண்டித்துவிடுவேன்.
இது போன்றவர்களிடம் இருந்து நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் நம்மை தவறாக பயன்படுத்திக்கொள்வர். முதலில் நம்மை நாம் மதிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் மதிப்பார்கள்", என அவர் தெரிவித்தார்.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!