ஆபாச வீடியோவில் இருப்பது ஸ்ருதி நாராயணன் தான்.. AIனு சொல்லி தப்பிக்க முடியாது..விளாசிய ஷகிலா!

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சைக்குரிய வீடியோ கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டார். அந்த வீடியோ குறித்து, ஸ்ருதி நாராயணன், தனது இன்ஸ்டாகிராமில்,
அது போலியாக உருவாக்கப்பட்டது என்றும், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கி உள்ளார்கள் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலா, அந்த வீடியோவை நான் பார்த்தேன், அது AI இல்லை, அது ஸ்ருதி நாராயணன் தான் என்று கூறியுள்ளார்.

நான் ஸ்ருதி நாராயணனின் வீடியோவை பார்க்காததால், அந்த பெண்ணிற்கு நான் ஆதரவு தெரிவித்து வந்தேன். அந்த வீடியோவை நான் பார்த்த பிறகு தான் அந்தப் பெண் செய்தது மிகப்பெரிய தவறு என்று எனக்குத் தெரிந்தது. எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கட்டும் அதற்காக இப்படியா செய்வார்கள். அந்தப் பெண் செய்தது மிகப்பெரிய தவறு. இதற்காக அனைவரும் ஷகிலா ஆண்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று சொல்வார்கள். அந்த வீடியோவில் பேசும் ஆணுக்கு நான் எப்படி ஆதரவாக பேச முடியும். அந்த வீடியோவில் ஆண்கள் இரண்டு பேர் பேசுவது போல தெரிகிறது. ஆனால், அது இரண்டு பேர் இல்லை ஒரே ஒருவன் தான் இரண்டு பேர் போல நாடகமாடுகிறான். அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. அதுபோன்ற ஆடிஷன் எல்லாம் நடக்கவே நடக்காது. இதற்கு பெயர் ஆடிஷனா... இதுல எங்கே நடிப்பு இருக்கிறது. முதலில் அந்த பெண் அது நான் இல்லை, ஏஐ என்று சொன்னார். பலர் AI ரொம்ப நல்ல விஷயம் என்று நினைச்சிட்டு இருக்கீங்க, உலகமே அழிய போகுது. யாருக்கும் வேலை கிடைக்கப் போறது கிடையாது, என்ன பண்ண போறோம்னு தெரியல. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா என செத்தவங்க எல்லாம் உயிரோட வருகிறார்கள் அப்படி என்றால், நாம சாகப்போகிறோம் என்று தான் அர்த்தம்.

shruthi narayanan siragadikka aasai Shakeela

அந்த நிர்வாண வீடியோவில் இருப்பது அவர் தான்: அந்த நடிகை அது ஏஐ நான் இல்லை என்றார். ஆனால், அந்த பெண் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அந்த வீடியோ எடுக்கும் போது, ஏதோ போன் வருகிறது. அதை கட் செய்கிறார். இதனால், அது AIனு சொல்லி தப்பிக்க முடியாது, அந்த நிர்வாண வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான். இப்படி கேவலமானதை செய்து தான் படவாய்ப்பை பெற வேண்டுமா... இவ்வளவு நடந்த பிறகும், அந்த பெண் அந்த வீடியோவை வெளியிட்ட சம்மந்தப்பட்ட ஆணின் பெயரை ஏன் வெளியில் சொல்லவில்லை. அந்த வீடியோவை எடுக்கும் ஆண், ஏற்கனவே யாரிடமாவது செக்ஸ் வைத்து இருக்கிறீர்களா என்று கேட்ட போது, அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று சொல்லு அந்த நடிகை, தன்னுடைய உடம்பை அப்பட்டமாக காட்ட வேண்டுமா... ஒரு கட்டத்திற்கு மேல் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டாமா... இது எல்லாம் அந்த பெண்ணுக்கு நன்றாக தெரிந்து தான் நடந்து இருக்கிறது. ஆனால், இந்த வீடியோவை வெளியிட்டவனை சும்மாவிடக்கூடாது, அதற்காக அந்த நடிகை செய்ததும் சரி என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் அந்தப் பெண் இதுவரைக்கும் புகாரே கொடுக்கவில்லை. அவர் புகார் அளிக்கும்போது தான் யார் மீது தவறு இருக்கிறது... யாரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் யாரை பெயிலில் வெளியே விட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும்.

shruthi narayanan siragadikka aasai Shakeela

எதற்கு இப்படி ஒரு விளம்பரம்: பல நடிகைகள் பொது நிகழ்ச்சியிலோ, பேட்டியிலோ, அவன் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டான், அவன் என்னை தொட்டான் என்று சொல்கிறார்கள். யார் பெயரும் வெளியே வராமல் இருப்பதற்காகத்தான் ஹேமா கமிட்டி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லலாம். ஆனால், நடிகைகள் அதை விட்டுவிட்டு பலர் பேட்டியில், என்னை அந்த இயக்குனரோ, நடிகரோ அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்தார் என்று சொல்லுவதை பார்க்கும் போது, அவர்கள் பட வாய்ப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ, இல்லை நான் அழகாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ செய்யும் செயலாக எனக்கு தெரிகிறது என்றார்.

மேலும் நான், சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது நான் சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்தே நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது என்பது இருந்தது. ஆனால், மறைமுகமாக கோட் வெர்டு வைத்துஎல்லாம் கேட்க மாட்டார்கள், நேரடியாகவே, இயக்குநரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டால், கட்டாயப்படுத்தமாட்டார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் நடிகையை தேர்வு செய்யும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி உடை அணிந்து வர சொல்வார்கள். பின் நாட்களில் அது போட்டோசூடாக மாறியது. அதன் பிறகு தான் கேமரா வைத்து ஆடிஷன் எடுக்க ஆரம்பித்தார்கள். அதுக்கூட சினிமாவில் புதிதாக நடிக்க வருபவர்களுக்குத்தான், சீனியர் நடிகர்களுக்கு கிடையாது. ஆனால், இதுபோன்ற ஒரு ஆடிஷனை நான் பார்த்ததே இல்லை என்று நடிகை ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

shruthi narayanan siragadikka aasai Shakeela

மோசமான கமெண்ட்: முன்னதாக யூடியுப் சேனல் ஒன்றில் நடிகை ரிஹானா இதுகுறித்து பேசி இருந்தார். அதில், ஸ்ருதி நாராயணனின் வீடியோ லீக் ஆகும் வரை ஸ்ருதி யார் என்று பலருக்கு தெரியாது. ஆனால், இன்றைக்கு ஸ்ருதி நாராயணன் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. ஒரு சில பேர், விளம்பரத்திற்காக ஸ்ருதி நாராயணன் செய்த வேலை இது என்றும், அந்த பொண்ணுக்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியே வந்து இருக்காது என்று சிலர் பேசுகிறார்கள். உண்மையில் ஒரு விளம்பரத்திற்காக ஒரு பெண், தன் உடம்பை உலகத்திற்கு காட்டுவாளா என்று எனக்குத் தெரியவில்லை. ஸ்ருதி நாராயணனின் வீடியோவை பார்த்த பலர், லிங்க் கிடைக்குமா என்றும், அவரை மோசமான வகையில் கமெண்ட் அடித்து வருகின்றனர். உண்மையில் அந்த பெண் தைரியமாக இருப்பது போல, இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து இருக்கிறாள். அதோ மனஅழுத்தத்தில் தற்கொலை முயற்சி செய்திருந்தால். ஆனால், உண்மையில் அவளது மனம் உள்ளுக்குள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். இதுபோன்ற கமெண்ட் செய்பவர்களின் நிர்வாண வீடியோ வெளியே வரும்போது தான் மற்றவர்களின் வலியும், வேதனையும் புரியும் என்று நடிகை ரிஹானா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X