Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காஞ்சனாவை மிஸ் பண்ணிட்டேன்.. பேய் கதையா நான் ரெடி.. சிம்ரன் பேட்டி!
சென்னை : நடிகை சிம்ரன் தனக்கு காஞ்சனா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் ஜோடியாகவும் கருதபட்டவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது நாயகி இடத்தில் இருந்து விலகி குணசித்திர நாயகியாகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடினார்.
நாயகியாக நடித்ததை விட சிம்ரன் குணசித்திர நடிகையாக நடிக்கும் போது பல எல்லை கோடுகளை உடைத்தெறிந்தார். குறிப்பாக வாரணம் ஆயிரம் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அம்மாவாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார் .மேலும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
சமீபத்தில் சிம்ரன் தனக்கு லாரன்ஸ் மூலம் காஞ்சனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் காஞ்சனா படத்தில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார் .இருந்தும் அந்த கதாபாத்திரத்திற்கு சரத்குமார் மிகச்சரியான தேர்வு என்றும் அவர் சிறப்பாக நடித்தார் என்றும் கூறினார் .
மேலும் தற்போதைய முன்னணி நாயகிகளான நயன்தாரா, திரிஷா , ஹன்சிகா போன்ற நடிகைகள் தைரியமாக அதிகபடியான பேய் கதைகளில் நடித்து வருவதாகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதை அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றும் கூறினார் .
மேலும் சிம்ரனும் தற்சமயத்தில் ஒரு நல்ல ஹாரர் கதைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். பேய் படத்தில் இதுவரை சிம்ரன் நடித்ததில்லை தற்போது சிம்ரன் நடித்தால் அது எப்படி இருக்கும் என்று காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்த சிம்ரனுக்கு பேய் கதையும் கதாபாத்திரங்களும் சவால் மிக்கதாகவே இருக்கும். இருப்பினும் பேய் கதையின் நாயகியாக சிம்ரன் ஆசைபட்டிருக்கும் தகவல் கோலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவை இந்நேரம் தட்டியிருக்கும் கூடிய விர அவரை பேய்யாக பார்க்கலாம்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு