Don't Miss!
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காஞ்சனாவை மிஸ் பண்ணிட்டேன்.. பேய் கதையா நான் ரெடி.. சிம்ரன் பேட்டி!
சென்னை : நடிகை சிம்ரன் தனக்கு காஞ்சனா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் ஜோடியாகவும் கருதபட்டவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது நாயகி இடத்தில் இருந்து விலகி குணசித்திர நாயகியாகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடினார்.
நாயகியாக நடித்ததை விட சிம்ரன் குணசித்திர நடிகையாக நடிக்கும் போது பல எல்லை கோடுகளை உடைத்தெறிந்தார். குறிப்பாக வாரணம் ஆயிரம் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அம்மாவாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார் .மேலும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
சமீபத்தில் சிம்ரன் தனக்கு லாரன்ஸ் மூலம் காஞ்சனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் காஞ்சனா படத்தில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார் .இருந்தும் அந்த கதாபாத்திரத்திற்கு சரத்குமார் மிகச்சரியான தேர்வு என்றும் அவர் சிறப்பாக நடித்தார் என்றும் கூறினார் .
மேலும் தற்போதைய முன்னணி நாயகிகளான நயன்தாரா, திரிஷா , ஹன்சிகா போன்ற நடிகைகள் தைரியமாக அதிகபடியான பேய் கதைகளில் நடித்து வருவதாகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதை அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றும் கூறினார் .
மேலும் சிம்ரனும் தற்சமயத்தில் ஒரு நல்ல ஹாரர் கதைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். பேய் படத்தில் இதுவரை சிம்ரன் நடித்ததில்லை தற்போது சிம்ரன் நடித்தால் அது எப்படி இருக்கும் என்று காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்த சிம்ரனுக்கு பேய் கதையும் கதாபாத்திரங்களும் சவால் மிக்கதாகவே இருக்கும். இருப்பினும் பேய் கதையின் நாயகியாக சிம்ரன் ஆசைபட்டிருக்கும் தகவல் கோலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவை இந்நேரம் தட்டியிருக்கும் கூடிய விர அவரை பேய்யாக பார்க்கலாம்.