Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
4 வருடம் யார்கிட்டயும் பேசல…சொர்ணமால்யாவின் ஸ்வாரசியமான பேட்டி
சென்னை: நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடன கலைஞருமான ஸ்வர்ணமாலையா FilmiBeat Tamil க்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
Recommended Video
அலைபாயுதே, மொழி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஸ்வர்ணமாலையா பல ஸ்வாரசியமான விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மும்பை ஏர்போர்ட்டில்.. பிரபல நடிகையின் வைரத்தோடு மாயம்.. உதவி கேட்கும் ஹீரோயின்!
பரத நாட்டிய கலையில் நிறைய சாதிச்சு இருக்கீங்க, வித விதமாக நிறைய பேருக்கு சொல்லி குடுத்து இருக்கீங்க.. சினிமாவில் எந்த நடிகையோட பரதம் உங்களை மிகவும் கவர்ந்தது என்ற கேள்விக்கு, லேடஸ்ட்டாக பரத நாட்டியம் தவிர்த்து தெலுங்கு பாடல் ஒன்றில் நடிகை சாய் பல்லவியின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக பதிலளித்தார்.
தனிமையில் கடந்த பல நாட்கள்
ஒரு பக்கம் டாக்டர், முனைவர் பட்டம் வாங்கி இருக்கீங்க இதுக்காக 8 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து சாதித்த தருணம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, அதுக்காக தான் பல விஷயங்களை இழந்ததாகவும்.. அம்மா, நண்பர்கள் என யாரிடமும் பேசாமல் புத்தகத்துடனே தனிமையில் பல நாட்கள் இருந்ததாகவும் தன் வாழ்க்கையின் அனுபவங்களை கூறியுள்ளார்.
நிறைய ப்ரொபோசல் வந்து இருக்கு
அலைபாயுதே படத்தில் வரும் மிக பிரபலமான அந்த ப்ரொபோசல் வசனத்தை உங்களுடைய நிஜ வாழ்க்கையில் உங்களை விரும்பிய எத்தனை பேர் சொல்லி இருக்காங்க என்ற கேள்விக்கு, இந்த 20 வருடங்களில் தான் போகிற இடமெல்லாம் இதை பற்றியே பலர் பேசுவதாகவும், நிறைய ப்ரொபோசல்ஸ் வந்து இருப்பதாகவும் பதிலளித்தார்.
பல விதமான இயக்குனர்கள்
சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தனக்கு ஏக பட்ட வாய்ப்புகள் வந்தும் கூட நிறைய படங்கள் ஒப்புக்கொள்ள வில்லை , அதற்கான காரணத்தையும் படிப்பு மீது கொண்ட ஆர்வத்தையும் தெளிவாக கூறி உள்ளார் .முன்னணி இயக்குனர்கள் இதனால் சிலர் செல்லமாக கோபித்து கொண்டு உள்ளனர் என்றும் அந்த நேர்காணலில் கூறினார்.
ஸ்வாரஸ்யமாக பதில்
இது போன்று இன்னும் பல கேள்விகளுக்கு ஸ்வர்ணமாலையா ஸ்வாரஸ்யமாக பதில் கூறியுள்ளார். ஸ்வர்ணமால்யாவின் பேட்டி பல பாகங்களாக நமது பில்மி பீட் யூடுயூப் சேனலில்லும் காணலாம் . இந்த பேட்டிகளை மிஸ் பண்ணாமல் கண்டு மகிழுங்கள். கலை மற்றும் கல்வி சார்ந்த நிறைய தகவல்கள் கொடுத்து உள்ளார் ஸ்வர்ணமால்யா .